Tuesday, August 7, 2007

மஞ்சள் மகிமை--PART-2

அன்பு வலைப்பதிவு பிள்ளைகளே,பல ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து மஞ்சளை நம் முன்னோர்கள் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பே பயிரிட்டு உபயோகப் படுத்தி வந்ததை அறியலாம்.ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் மஞ்சளை தனக்கு காப்புரிமை வேண்டி காப்புரிமை கழகத்திடம் பதிவு செய்தது கழகங்களின் பல ஆய்வுக்குப் பின் மஞ்சள் நம்முடையது என்னு அறிவிக்கப் பட்டது
அது மட்டுமல்ல அமெரிக்காவின் டபுள்யூ.ஆர்.கிரேஸ் என்னும் பன்னாட்டு இரசாயன
நிறுவனமும்,அமெரிக்க அரசும் வேம்புவை காப்புரிமை கோரி 1990ரில் பதிவு செய்தது,1994லில் காப்புரிமைப் பெற்றது.இந்தியாவின் பூர்வீக தாவரமான வேம்பை அமெரிக்கா தமதாக்கிக் கொண்டதை ஐரோப்பிய காப்புரிமை கழகத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்தது அல்லாமல் இந்த நடவடிக்கையை எதிர்த்து பெல்ஜியத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும்,ஐரோப்பிய நாடாளு மன்றத்தின் பசுமைக் குழுவின் உறுப்பினருமாக இருந்த மாக்டா ஆல்வோயட்டும்
இந்திய சுற்றுச் சூழல் போராளி டாக்டர் வந்தனா சிவாவும்,ஜெர்மனியின் சர்வதேச இயற்க்கை வேளாண்மை இயக்கத்தின் துணைத் தலைவருமான லிண்டா புல்லார்டும் முறையீடு செய்து,
W.R.GRACE காப்புரிமைப் பெற்றது "உயிரியல் கடத்தல் என்னு குற்றம்" என்று வாதாடி குற்றம் சாட்டினர் அமெரிக்க நிறுவனத்திற்க்கு அளித்த காப்புரிமை ஐரோப்பிய காப்புரிமை
அலுவலகம் 2000ம்ஆண்டு மே 10 ஆம் தேதி தற்காலிய ரத்து செய்தது.பின்னர் மேற்க் கூறியவர்களின் மேல் முறையீட்டின் மீது மூனிச்சில் உள்ள ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் ஆய்வு விசாரணை நடத்தி வேம்பு இந்தியாவில் வரலாற்றுக் காலம் முதல் இருந்துவரும் தாவரம் என்றும்,அதன் மருத்துவம் குணம் அறிந்த இந்தியர்கள ஆண்டாண்டு காலமாக பயன் படுத்திவருவதாலும்,வேம்பு மீதான காப்புரிமையை எந்த நாடோ நிறுவனமோ சொந்தம்
கொண்டாட முடியாது என வாதிட்டனர்.இதை ஏற்றுக் கொண்டு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் கிரேஸ் நிறுவனத்திற்க்கு வழங்கப் பட்ட காப்புரிமையை முழுவதுமாக ரத்து செய்து தன் இறுதி தீர்ப்பை வழங்கியது.இது பாரம்பரிய அறிவிற்க்கும்,பயன்பாட்டிற்க்கும் கிடைத்த வெற்றி என்று கூறிய ஆல்வோயட்,ஒரு நாட்டின் பாரம்பரியமாக இருந்துவரும் தாவரத்தின் மீதான உரிமை எனும் அடிப்படையை ஏற்றுக் கொண்டு காப்புரிமை வழக்கில் இப்போழுதுதான் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்துள்ளது என்று,முன்னேறிவரும் நாடுகள் தங்கள் நாட்டில் உற்ற இயற்க்கை வளங்களின் மீது அவைகளுக்குரிய மேலாண்மையை நிலை நாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.நான் இது உண்மைக்கு கடவுள் கொடுத்த வெற்றி என்பேன்.

இனி மஞ்சளின் மகிமையைக் காண்போம்.மஞ்சள் மூன்று வகை உள்ளது,
1.பூசு மஞ்சள்.2கறி மஞ்சள்(சமையல் மஞ்சள்)3.விறலி மஞசள்(கொம்பு மஞ்சள்)
எல்லா வகைக்கும் மருத்துவ குணம் உண்டு.மஞ்சளின் சிறப்பு அம்சங்களாவன,
1.கிருமி நாசினி-antiseptic.
2.அழகு சாதனம்-cosmetic.
3.துணை உணவு-supplementary.
4.விட உயிர் கொல்லி-pesticide.
5.நோய் கிருமி கட்டுப்படுத்தி-antibiotic.
6நோய் நீக்கி-medicine.
இதன் செயல்பாட்டை வரும் பதிவில் கூறுகினேன்.

Wednesday, July 25, 2007

மஞ்சள் மகிமை

மஞ்சள் மங்களகரமான பொருள்.இறைவன் அளித்த அற்ப்புத முலிகை என்று கூறினால் அது மிகையாகாது.எந்த ஒரு மங்கள நிகழ்ச்சிக்கும் முதலிடம் பெறுவது மஞ்சள்.தங்கத் தாலி இல்லா வரிய மகளிர் மஞ்சள் தாலி அணிவதும் உண்டு.ஏன் இதற்க்கு இத்தனை பெருமை.
திருமண நிகழ்ச்சியில் மஞ்சள்,விழாக்களில் மஞ்சள்,காயப்பட்டால் மஞ்சள்,கதவு நிலைப் படியில் மஞ்சள்,உணவில் மஞ்சள்,புது உடையில் மஞ்சள்.மஞ்சள் நம் வாழ்வின் அங்கமாகவே திகழ்கிறது.இது இறைவன் நமக்கு அளித்த அறிய முலிகை என்று முன்பே கூறிவிட்டேன்.மஞ்சளைப் பற்றிய குறிப்புக்களையும் அதன் உணவு சத்தின் விகிதத்தையும் நம் கலாச்சாரத்துடன் எவ்விதமாய் கலந்துள்ளது என பலவற்றை நான் சேகரித்து பதிவாக இட இருந்தேன்.24ம் தேதி தினமலர் வெளியிட்டில் அமெரிக்கா லாஸ்அஞ்சல்லிஸ் நகரத்தில் உள்ள அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தில் செயலாற்றும் டாக்டர் மிலன் பாய்லாவின் கண்டுபிடிப்பில்,எதிற்ப்பு சக்தி குறையும் போது நினைவாற்றல் நரம்புகளைப் பாதிப்பது அமிலாய்டு எனப்படும் ஒரு வகை ரசாயனப் பூச்சாகும்.எவ்வகை மருந்தினாலும் இதை எடுக்க முடிவதில்லை.இதை நீக்க உதவும் ரசாயனம் நம் சமையல் (கறிமஞ்சள்) மஞ்சளில் உள்ளது.எனவே மஞ்சளை உணவில் சேர்க்க கூறுகிறார்கள்.நம் சமையலில் மஞ்சள் சேர்க்காத கறி, குழம்பு வகையே இல்லை என்று கூறலாம்.வரும் பதிவில் மஞ்சளின் சத்து விகிதம்,நம்மவர் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்துகிறோம் என்பதை என்பதை விரிவாக கூறுகிறேன்.கிழ் வரும் செய்தி TheSpiceBarn.com

thanks to TheSpiceBarn.com for the following information:
quote:

Turmeric is one of the key ingredients in curries as well as prepared mustards, giving them color and flavor.

With it's rich distinctive yellow colour and flavor, Indian turmeric is considered the best in the world. India is the largest exporter of turmeric to countries like Canada,Middle East,UK,USA and Japan. Turmeric has been cultivated in India for more than 2000 years.

Besides it's culinary gifts, Turmeric is also used to dye cloth.
unquote:

Monday, July 9, 2007

" 8 " போட்டாச்சு.

நம்பளைப் பற்றியே நாம்ப பீத்திக்கனுமுன்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு,என்ன செய்யிறது பீத்துக்குவோம்.
வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை,ஆனால் நல்ல மனைவியாய்,தாயாய், பாட்டியாய்,தோழியுமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெறுங்கினப் பொருள் கைப்பட வேண்டும்.என்பதில் நம்பிக்கைக் கொண்டவள்.

1.தெய்வ நம்பிக்கை:-
இறை நம்பிக்கை சிறு வயதுமுதல் என்னுள் உருவானது.இந்த நம்பிக்கைத் தான் என் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட தாழ்விலும்,துன்பத்திலும் உறுத்துனையாய் இருந்தது.மலைப் போல் வந்த துன்பங்கள் பனிப் போல் மறைவதை நான் மட்டும்மல்ல என்னை சூள்திருப்பவர்களும் உணர்வது.இறை நம்பிக்கையால் மனதில் உறுதி உண்டு.
2.அன்பு பாசம்:-
என்னுடைய strength and weakness என் பிள்ளைகள் என போத்தி.என் அன்புத் தொல்லைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதி படுவதும் உண்டு.அன்பினால் நன்பர் குழு அதிகம்,நான் அன்பு காட்டுவோர் என்னிடம் அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
3.நட்பு:-
எத்தனை நாட்கள்,வருடங்கள் ஆனாலும் நன்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது.அவர்களின் இன்ப,துன்பங்களில் பங்கு கொள்வது.
4.இளகிந மனம்:-
துன்ப,மன வருத்தத்தில் உள்ளவர்களைக் கண்டால் வலிய சென்று ஆறுதல் கூறுவது முடிந்த அளவு உதவுவது.இதனால் இக்கட்டில் மாட்டிக் கொள்வது.இருப்பினும் வருத்தத்தில் உள்ளவர்களை காணாமல் போக என்னால் இயலாது.
5.செய் நன்றி:-
செய் நன்றி என்றும் மறப்பதில்லை.செய்த உதவிக்க்கு கைமாறு செய்வதில் ஆர்வம் கொள்வது.
6.பொறுப்பு:-
பொறுப்புக்களை ஏற்க்கும் போழுது அதில் சிரத்தையுடன்,சிறப்பாக செய்வது,அதன் பயனாக நல்ல மனிதர்களின் அறிமுகத்தைப் பெற்றது.
7.பாரம்பரியப் பெருமை:-
நமது கலாச்சாரம்,பழக்க வழக்கங்கள் அதன் அடிப்படை அறிவியல்.தாய் வழிப்பாட்டி,தந்தை வழிப் பாட்டி,கணவர் வழிப் பாட்டி இவர்களின் கைவைத்திய்,சமையல் குறிப்பு, கைவேலை இவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளுதல்.
8.
சூழ்நிலைக்கு ஏற்று அமைவது:-
எந்த சூழ் நிலையையும் ஏற்று வாழ்வது,எதைக் கொடுத்தாலும் சுவையுடன் சமைப்பது,கலை நயத்துடன் அமைப்பது,ஒன்றே குலம் என்ற கொள்கை கொள்வது.
ஒரு வழியா முடிச்சாச்சு அப்பா!

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

ஆள் பிடிக்கிறது:
கண்ணபிரான் ரவி சங்கர்
பாலர
செந்தில்
சிங்கமுல ace
முத்துலச்சுமி
தேவபுதல்வன்
ஜொள்ளு பாண்டி
செல்வேந்திரன்

Tuesday, June 19, 2007

வாலறிவு-part 2

அன்புள்ள வலைப்பதிவு பிள்ளைகளே சிறிதளவே ஞானம் இருந்தாலும் பிரச்சனை வருமுன் எச்சரிக்கை செய்யப் படுவதை என் அனுபவத்தில் உணர்ந்ததை கூறுகிறேன்.அதற்க்கு முன் ஞானத்தை அடைவது எப்படி.இயற்கையின் அதிசயத்தைப் பார்க்கும் போதோ அறிவியல் சார்ந்த அதிசயத்தை காணும் போதோ நாம் வியந்து இறைவனின் மகத்துவத்தை உணரும் போது தான் ஞானம் ஆரம்பமாகிறது.அப்போழுது இறைவனை முழுமையாக அறிய மனம் நாடும்.
இறைவனின் படைப்புக்களில் இலச்சனங்கள் உள்ளது போல் அவருக்கும் இலச்சனங்கள் உண்டு
அவையாவன 1.இறைவன் ஒருவராய் மட்டுமே இருக்கிறார் 2.அவருக்கு துவக்கமுமில்லை முடிவுமில்லை.ஆதியும் அவரே அந்தமும் அவரே 3.சுத்த அருபியாய் இருக்கிறார்.அவருக்கு உருவமில்லை.4.அளவில்லா அன்பும் கருணையும் உள்ளவர்.அன்பு கருணையின் இருப்பிடம் அவரே.5.எங்கும் நிறைந்திருக்கிறார்.அவரில்லா அண்ட சராசரமில்லை.(தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்)6.அணைத்திற்க்கும் ஆதிகாரணர் அவரே,படைப்புக்கள் அணைத்திற்க்கும்
காரண கர்த்தர் அவர்.இவை அணைத்தையும் எல்லோரும் அறிந்தது தான் என்றாலும் அதை தியானித்தல் அவசியம்.

தனக்கு உவமை இல்லாதான் என்று வள்ளுவர் கூறும் ஈடு இணையற்ற உன்னத மகததுவராம் இறைவனை வழிப்பட்டு சரண்ணடைவதன் மூலம் ஞானத்தை பெறுகிறோம்.
வழிபடுதல்-இறைவன் காட்டும் வழியில் நடத்தல்.குற்றமற வாழ்வது.முன் கூறியது போல் பெரிய குற்றங்கள்,சிறிய குற்றங்கள்.இவை மூன்று வகைப் படும்,1.இறைவனுக்கு எதிரான குற்றங்கள்,2.பிறருக்கு எதிரான குற்றங்கள்.3.தனக்குதானே எதிரான குற்றங்கள்.பெரிய குற்றங்களுக்கு மனிதன் இறைவனால் தண்டிக்கப் படுவான்,சிறிய குற்றங்களுக்கு கண்டிக்கப்படுவான்.இறைவனுக்கு எதிரான குற்றம் செய்யாதிருத்தல்
1.சர்வ வல்லமையுள்ள இறைவனை மட்டுமே ஆராதித்தல் வேண்டும்.2.வீனே இவர் நாமத்தை இழுக்கக் கூடாது.பிறருக்கு எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.தன்னிடம் பிறர் எவ்வாறு மதித்து அன்பு காட்ட வேண்டும் என்று நிணைக்கிறோமோ அவ்வாறே பிறறை மதித்து அன்பு காட்ட வேண்டும்.2.தந்தை தாயைப் பேணி மதித்தல் வேண்டும்.3கொலை செய்யாதிருத்தல்.4.களவு செய்யாதிருத்தல்.5பிறர் மனைவியை விரும்பாதிருத்தல்.6.பிறர் உடைமைகளை விரும்பாதிருத்தல்
7.பொய் சாட்ச்சி கூறாதிருத்தல்.தமக்குத் தானே எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.காமத்தில் விழாதிருத்தல்.பெரிய குற்றங்களை பெரும் பாலோர் செய்வதில்லைத் தான் பின்னே நல்லாதானே இந்த கிழம் கூறிக் கொண்டிருந்தது.ஏன் நமக்கு பயம் காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா?அன்புள்ளம் கொண்ட பிள்ளைகளே உங்களுக்கு இது சம்மந்தமில்லை என்பது நிச்சயம்,ஒருவன் மற்றவனின் உயிரை பறிப்பது மட்டும் கொலையில்லை உயிரைவிட மேலான மானத்தை,நற் பெயரை கெடுப்பவனும் கொலைகாரனே.அவ்வாறு நடப்போரின் நட்பு மட்டுமல்ல அருகில் கூட நீங்கள் செல்லக் கூடாது என்பதே என் அவா.இப்படிப் பட்ட மறைமுக குற்றங்களைப் பற்றி மற்றொறு பதிவில் கூறுகிறேன்.

சிறிதளவே ஞானம் நமக்கு இருந்தால் எவ்வாறு எச்சரிக்கப் படுகிரோம் என்பதைக் காணலாம்.எனக்கு நன்கு அறிமுகமான மாது ஒருவரின் கணவர் வழி சொத்துக்களை அவரின் பங்காளி தகாத முறையில் அபகரித்துக் கொண்டார்கள்.இதை உறவுகள் அண்டை வீட்டார்
எல்லோரும் அறிந்திருந்தாரகள்.அவர்கள் உரிமையை அடைய சட்டத்தின் உதவியை அனுகினார்கள்.அந்த மாதின் கணவர் இல்லாத தருனத்தில் எதிராளிகள் அந்த மாதை அனுகி சமாதானம் முறையில் பேசி தீர்க்க ஒர் இடத்திற்க்கு வருமாறு அழைத்தார்கள்.அண்டை வீட்டாரும் போகுமாறு வற்புறுத்தினர்,அவரும் போக தீர்மானித்தார்.எனினும் கடவுளிடம் பிராத்தித்து வருவதாக கூறினார்.தெய்வத்திடம் பிராத்தித்த பின் செல்ல மறுத்து விட்டார்.
அண்டை மனிதர்களுக்கு சிறிது மனத்தாங்கல் தான்,சமாதானம் பேச வருகையில் அம்மாது மறுத்ததை அவர்களால் ஏற்க்க முடிய வில்லை.சிறிது காலத்திற்க்குப் பின் அதே அண்டை வீட்டார் ஒரு திடுக்கிடும் செய்தி கூறினார்கள்,அந்த மாதை சமாதானத்திற்க்கு அழைத்து மானபங்கம் செய்து மிரட்ட திட்டமிட்டார்கள் என்று.அந்த மாதிடமிருந்த ஞானம் அவரை போகவிடாமல் எச்சரித்தது.நான் எச்சரிக்கை செய்யப்பட்டதை அடுத்த பதிவில். (தொடரும்)

Friday, June 15, 2007

News: Brain gets a thrill from charity: study

News:
Brain gets a thrill from charity: study

CHICAGO (Reuters) - Knowing your money is going to a good cause can activate some of the same pleasure centers in your brain as food and sex, U.S. researchers said on Thursday. People who participated in a study got a charge knowing that their money went to a charity -- even when the contribution was mandatory, like a tax. They felt even better when they voluntarily made a donation, researchers found.

Ulrich Mayr, a psychology professor at the University of Oregon, said the research sheds light on the nature of altruism and could help people feel better about being taxed."It shows that in an ideal world you could have a tax situation where you could be a satisfied taxpayer," said Mayr, whose study appeared in the journal Science.

In the study, Mayr and two economists gave 19 women volunteers $100 each and then tracked their brain activity in a functional magnetic resonance imaging scanner.
The women were shown their money automatically being transferred from their account to a local food bank.When the money reached the food bank account, it activated portions of the brain -- the caudate nucleus and the nucleus accumbens -- known for pleasure. The effect was even greater when the people got to choose to give the money away.

"What is interesting is that these pleasure areas are for really basic needs, like food, sex, sweets, shelter and social connection," Ulrich said in a telephone interview. "It's the area that tells the brain what is good for us."
As it turns out, "That very same brain area not only tracks what is good for us, but what is good for others," he said.

He and colleagues were hoping to find out whether there was something in the act of giving itself -- and not just the social and egotistical reward of being a philanthropist -- that offers satisfaction."The fact that we find pleasurable activity in those mandatory tax-like situations strongly suggests the existence of pure altruism," he said.

"What it shows is that, in principle, we are capable of feeling good about doing our share," he said.

for further information on the article, please check the link below

http://news.yahoo.com/s/nm/20070614/hl_nm/brain_altruism_dc


உண்மை உண்மையைத் தவிர வேரில்லை-Part-2

நாம் பிறருக்கு கொடுப்பதில் உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.அதை ஒரு வித addiction என்றே சொல்லலாம். பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவதால் தான் நாம் அதற்க்கு அடிமையாகிறோம் என்பதை இச் செய்தியிலிருந்து விளங்குகிறது அல்லவா?

Saturday, June 9, 2007

வாலறிவு

என் அன்பு வலைப்பதிவு பிள்ளைகளே நான் தமிழில் எழுத முடியாத பொழுது உதவிக்கரம் நீட்டிய அன்பு மகன் சந்தோஷ்சுக்கும்,உற்ச்சாக படுத்தி வரவேற்ற அன்பு மகன் நாகை சிவாவிற்க்கும், என்னை அவர்கள் சொந்தமாகவே பாவித்து ஆசையோடு அழைக்கும் அன்பு போராண்டிகள் balar,cvr,செந்திலுக்கும்,போத்திகள் my friend,rajiக்கும்.நான் எழுத கருத்துக்களைத் தந்த அன்பு போராண்டிகள் ஜீ,ACE க்கும்.மற்றும் சியாம்,சிபி,மனசக்கும்,
நகைச் சுவையால் மகிழவைத்த போராண்டி ஜொள்ளுக்கும்.என்னுடைய நொச்சல்ஸ், புடுங்கள்ஸ்க்கு ஈடு கொடுத்து பதிவை பதியச் செய்த என் இனிய இளய மகளுக்கும்,எழுதுங்க அம்மா என்று என்னை இடைவிடாது ஊக்குவித்த என் அருமை முத்த மகளுக்கும்,"ஏதோ எழுதின சரி" எனறு மிக உற்ச்சாகமான வார்த்தைகள் செல்லிய என் ரங்கமணி அவர்களுக்கும், இரண்டு பெக் விஸ்கி அடிச்சலும் உங்களைப்போல் ஆக என்னால் முடியாது அம்மா என்று ஐஸ் வைக்கும் என் அருமை மருமகனுக்கும்,"LAST BUT NOT LEAST",MY PRECIOUS செல்ல குட்டி என் பேத்தி "you are great ammu" என்றுக் கூறி என்னைப் பூரிக்க வைத்தவளுக்கும்.என் உளம் கனிந்த வாழ்த்துக்களும்,நன்றியும் கூறி,தொடர்கிறேன். இலையுதிற் காலத்திற்க்கு வந்துவிட்ட நான், வசந்தத்திலிருக்கும் இளய தலை முறைக்கு சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன்.

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு"


இந்த தலை முறைக்கு அறிவு அதிகம்,அவர்கள் அனுகுமுறையும் முதிர்தே இருக்கிறது.எதையும் அறிவதில் ஆர்வம்,சாதிப்பதிலும் அதிக உற்ச்சாகமும்,தீவிரமும் காட்டுகிறார்கள்.காட்டாற்று வெள்ளம் போல் அதை விடலாகாது.காட்டாறு வெள்ளம் வரும் நேரங்களில் கரைபுரண்டோடும் மற்ற நேரங்களில் காய்ந்து கிடக்கும்.வற்றாத ஜீவ நதியாய் இருக்க ,மூத்த தலை முறையின் அறிஉரை அவசியம்.காலத்திற்கேற்றவாறு மூத்த தலை முறையும் மாறித்தான் ஆகவேண்டும். பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை என்றேகூறலாம்.அளவுகள் தான் வித்தியாசப் படும். ஒவ்வொரு மனிதனுக்கும் சிங்க பார்வை வேண்டும்.அதென்ன சிங்கப்பார்வை?சிங்கமானது தன் பேடை,குட்டிக்கு முன் செல்லும்,சிறிது தூரம் சென்ற பின்,அவற்றின் பின் நின்று தான் வந்த திசையை நோக்கிப் பார்க்கும்.பின்னர் பேடை,குட்டிக்கு முன் செல்லும்.எதிரிகளை முன் நோக்கிப் பார்க்கும் சிங்கம் பின் நின்று பின்னால் எதிரி வருகிறதா?என்று பார்பதுதான் சிங்கப்பார்வை.ஒவ்வொரு மனிதனும் பிரச்சனையை சமாளிக்க வேண்டும்,அந்த பிரச்சனையை எப்படி சமாளித்தோம் இன்னும் நல்ல முறையில் எப்படி சமாளிப்பது எனறு சிந்திக்க வேண்டும் பின் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது எளிதாகிவிடும்

ஒருவன் தன திறமையால் உயர்ந்த வழிகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தயங்குவான்,ஏன் என்றால் தன முன்னேற்றத்துக்கு மற்றவன் தடையாகி விடுவானோ என்ற பயம்.இது முற்றிலும் யதார்தமானது.ஆனால் ஒருவன் கடவுளை அறிந்த மாத்திரத்தில் அவன் சும்மா இருக்க இயலாது.அவன் பெற்ற தெளிந்த இன்பத்தையும்,பலனையும் பிறரிடம் கூற தயங்கமாட்டான். ஏன்?முன்னது தனி மனிதனின் சுயநலத்தை சார்ந்தது,ஆனால் தெய்வத்திடம் சுயநலமில்லை,அவர் நல்லோருக்கும், தீயோருக்கும், அறிவாளிக்கும், அறிவிளிக்கும் தெய்வமவர்.எனவே கடவுளை அறிந்தவன் சுயநலமற்று தான் பெற்ற தெளிந்த இன்பத்தையும், பயனையும் பிறர் அடைய விரும்புவான்.அறிவு என்பது உலகத்தைச் சார்ந்தது ,ஞானம் என்பது கடவுளைச் சார்ந்தது.கடவுளைப் பற்றிய பயமே ஞானத்தின் ஆரம்பம். கடவுளிடம் நாம் கொண்டிருக்கும் பயம் உலக பயம் போல் இல்லை.அது அவரின் அனபை விட்டு விலகி விடுவோமோ என்ற பயம்.ஞானமுள்ளவன் பெரிய குற்றங்கள் எதையும் செய்ய மாட்டான்,சிறிய குற்றம் செய்யாத மனிதர்கள் இல்லை என்றே கூறலாம்,அது மனித குலத்திற்க்கே உள்ள குறைபாடு., சிறிய குற்றத்திலிருந்து தன்னை திருத்திக் கொள்ளவும், பெரிய குற்றங்கள் அனுகாமல் இருக்கவும்தான் ஞானம் தேவைப்படுகிறது.ஞானத்தை வளர்த்துக் கொண்டவன் பேய், பிசாசு,பிரச்சனை,இயற்கை சீற்றம் கண்டு பயப்படான்.அவனிடமுள்ள ஞானம் அவனை முன் எச்சரிக்கை செய்யும்.எனவே கடவுளிடம் அன்பு கொண்டவன் எதற்கும் அஞ்சான்.நான் எந்த சமயத்தைப் பற்றி கூற வில்லை,அண்ட சராசரங்களையும் அடக்கி ஆள்பவரைத்தான் கூறுகிறேன்.இளகிய மனம் படைத்த பெண்கள் எனறால் இயற்கை என்று கொள்வார்கள், ஆனால் இளகிய மனம படைத்த ஆண்கள் என்றால் கோழை என்று கூறுவது முற்றிலும் தவறு.இளகிய மனம் என்பது அன்பின் அடிப்படையில் வருவது.அன்பே கடவுள். உண்மை அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.

அறத்திற்கே அனபுசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துனை

எனவே வீரத்திற்கும் அதுவே துனையாய் இருக்கிறது.அது மட்டுமல்ல,ஒருவனிடம் நிறைவான அன்பு இருக்கும் பொழுது பிறருக்காக மனம் கசிவதைத்தான்

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்

என்றார் எனவே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று மீண்டும் கூறுகிறார்.அன்பு கொண்டோர்க்கு பயமில்லை,பகைமையில்லை,நல்ல நட்பு உண்டு."Birds of a feather flock together"என்பதற்கேற்ப அன்புள்ளம் கொண்டோர் ஒன்று கூடுவர்.சிறிதளவே ஞானம் இருந்தாலும்.பிரச்சனை வரு முன் எச்சரிக்கை செய்யப் படுவதை என் அனுபவத்தில் உணர்ததை வரும் பதிவில் கூறுகிறேன்.

பி.கு.இந்த பதிவின் கருத்தை எற்றுக்கொள்பவர்கள் மட்டுமின்றி மறுப்பவர்களும் தங்கள் பின்னுட்டு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திருத்திக் கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்.

Tuesday, June 5, 2007

உண்மை உண்மையைத் தவிர வேரில்லை- Part 2

நாம் பிறருக்கு கொடுப்பதில்,உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்,அதை ஒருவித addiction என்றே செல்லலாம்.இவ்வாறுதான் நான் அன்றும், இன்றும் இருக்கிறேன்.இதனால் பல இக்கட்டு இடையூறுகளும் உண்டு.இக்கட்டு வரும் நேரங்களில்,இனி இவ்வாறு இருக்கக் கூடாது என்று தீர்மானிப்பேன்.அது சிலமணி நேரங்களில் பறந்து விடும்.செய்ய வேண்டும் என்று நினைக்கும் காரியங்களில்,தீவிரமாக இருப்பேன்.சவால் விட்ட பெண்களே என்னை தனியாகப் போக வேண்டாமென்று தடுத்தார்கள்.பாதிக்கப் பட்ட பெண்கள் அனைவரும் தடுத்தார்கள்.வெகு சிலரே ஒன்றும் கூறவில்லை.ஒரு பெண் என்னிடம் நீ தனியாய் போய் வந்தாய் என்பதற்க்கு என்ன ஆதரம் என்று கேட்டாள்.அவளை மற்ற பென்கள் கோபித்தார்கள்.study hallலைக் கடந்துதான் toiletக்கு செல்ல வேண்டும்.அங்கு பெரிய black board உண்டு.மாணவிகள் பிறந்தநாள் முக்கிய நிகழ்ச்கள்,அதில் எழுதப்படும் அங்கு வர்ண சக்பீஸ்கள் இருக்கும்.நான் அந்த பெண்ணிடம் அங்குள்ள மஞ்சள் நிற சக்பீஸ்சில் +போடுவதாகக் கூறினேன்.


அந்த நேரம் வந்தது மாலை 7.30திலிருந்து 8மணி வரை prayer .அப்பொழுது எல்லோரும் prayer hall லில் இருந்தார்கள்.அன்று எனக்கு உண்மையில் toilet போக வேண்டி இருந்தது, prayer நடுவில் நான் எழும்பியதைப் பார்த்த சில மாணவியின் கண்கள் விரிந்தன ,நான் அவர்களிடம்''v'என்று விரலில் காட்டினேன் (இரட்டை இலை இல்லை) சர்ச்சிலின் விக்ட்ரி காட்டும் குறி toilet சென்றேன்.வந்த வேலை முடிந்தது.நான்கவது toilet கதவில் + குறி போட்டேன் 4 bathroom 6 toilet உணடு,ஒரு தண்ணிர் தொட்டி அதன் விளிம்பில் சில mugs நான் காலில் chappals போட்டிருந்தாலும்,கால் கழுவுவதற்க்கு தண்ணீர் தொட்டியருகில் சென்று தண்ணீர் எடுத்து, சாதித்த மிதப்பில், பேயாவது,பிசாசவது யாருக்கு காது குத்துறார்கள் என்று சத்தமாக கூறிக் கொண்டு,பின்புறமாய் குதிங்காலை கழுவ திரும்பிய பொழுது mug கை வெடுக்கென்று பிடிங்கி தரையில் அடித்தது போல் இருந்தது.யரையும் காணோம்.நாம் தான் அடித்தோமா என்ற ஒரு நிலை.பின் alert ஆகி மற்ற mug கில் தண்ணீர் எடுத்து கழுவ குனிந்த மத்திரத்தில் நான் பார்த்துக் கொண்டே இருக்கும்போழுதே mug ஐ பிடுங்கி எதிர் சுவற்றில் தண்ணீருடன் பளீர் என்று அடித்தது.அதுவரை பயம என்ன என்று அறியாத எனக்கு மனதில் திக் என்ற உணர்வு ஓ இது தான் பயமோ? கடவுளின் நாமத்தைக் கூறிக்கொண்டே வெளியே வந்தேன்.என்னோடு சபதம் செய்த பெண்களும் மற்ற சில பெண்களும் நான் toilet லிருந்து வெளி வருவதையும்,என் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாததை அவர்கள் உணர்தார்கள் போலும்,என்னை அதிசயத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அறைக்குச் செனறேன்,இரவு உணவுக்காக என்னுடன் இருந்த பயிற்ச்சி ஆசிரியர் காத்திருந்தார்.நான் குளிர்த நீரில் கழுவி ஜெபித்த பின் மனம் தெளிவானது.உணவு உட்கொண்டேன். நடந்த உண்மையை யாருடமும் கூற வில்லை.மறு நாள் study hall லில் எல்லோரும் என்னை ஒர் அதிசயத்தை பார்பது போல் பார்த்துக் கொண்டுருந்தார்கள்.மெலிந்த பெண் என்னிடம் உன்னை ஒன்றும் செய்வில்லையா என்று கேட்டாள்,இல்லை என்று தலையாட்டினேன்.நீங்கள் யாரும் தனியே செல்ல வேண்டாம் என்று எச்சரித்தேன். ஒன்று மட்டும் உறுதியாய் உணர்ந்தேன் ,பேய் இருக்கிறது,நான் பாதிக்கப் பட்ட பெண்களிடம் கேட்டுத் தேரிந்தது,பேய் அவர்களை தொடவோ அல்லது தெட்டது போல் உணர்வோ இல்லை ஒவ்வொருவரையும் ஒவ்வோரு விதமாக பயம் காட்டி இருக்கிறது.நம்மை தொடவோ உயிரை எடுக்கவோ கடவுள் அனுமதிப்பதில்லை.அது நம்மை பயம் காட்டுவதால் ஆடு, கோழி வெட்டி அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது போலும்.நம்மை தொட முடியாத பேய்க்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்.ஒரு வருடங்களுக்குப் பின் எனக்கு வயிற்று கோளறு எற்பட்டது.என் தந்தையிடம் doctor,boarding உணவு ஒத்துக் கொள்ளவில்லை கூறியதால் என் தாய் வழி தாதா வீட்டில் என் பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன்.


நாலைந்து வருடங்களுக்குப் பின், கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த போழுது,என் அத்தை மகள் அதே congregation கன்னிகாஸ்திரி, அந்த boarding school க்கு மாற்றலாகி இருந்திருந்தார்.அவரைக் காண என் குடும்பத்துடன் சென்றிருந்தேன்.நான் என் அத்தை மகளிடம் எனக்கு அறிமுகமானவர்களை பார்க்க விரும்புவதாயும் ,convent சுற்றி பார்கவேண்டும் என்றேன்.என்னை அழைத்துப் போனார்கள்.நான் பேய் toilet காண, அத்தாச்சி இங்கு ஒரு toilet இருந்ததே அது எங்கே?என்றேன்,ஓ அதுவா mother எப்பவோ இடித்து விட்டார்கள். ஏன்?என்றேன்,அது மிகவும் பழசு மேலும் சில பிள்ளைகள் பேய்,பூதம் என்று அரண்டார்கள்,அதனால் இடுத்துப் போட்டாச்சு.அந்த toilet இப்போழுது திறந்த வெளியாய் சூர்யஒளியில் பளீர் என்று காட்சி அளித்தது.ராசமாணிக்கம் அக்கா சொர்கம் சென்றுவிட்டார்கள். துளுக்கி வளர்ந்திருந்தாள். boarding school முழுவதுமாய் மாறிப் போய் இருந்தது.

Friday, June 1, 2007

உண்மை உண்மையைத் தவிர வேரில்லை

அன்பு வலைப் பதிவாளர்களே, இதோ பேய்!! இதுதான்டா பேய்!! என்று உருவத்தைக் காட்ட இயலாது. நான் 8டும் 9தும் படிக்கும் போது boarding school இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. அது கன்னிகா ஸ்திரிகள் நடத்தும் பள்ளி. அங்கு dormitory என்றும் special rooms என்றும் இரு பிரிவுகள் இருந்தது dormitory பிரிவில் இருந்தவர்களுக்கு toilet சற்றுத் தள்ளி இருக்கும் நான் special room மில் இருந்தேன் . எங்களுக்கு room மில் bath/toilet உண்டு. Study hall எல்லோருக்கும் பொது. அங்கு எங்களை ஒரு கன்னிகா ஸ்திரி கண்கானிப்பார. நான் சேர்ந்த புதிதில் நாலைந்து மாணவிகள் சிலரைச் சேர்த்துக் கொண்டு கண்கானிப்பவரிடம் சைகை காட்டுவார்கள்,அவரும் தலை அசைப்பார் அவர்கள் போய் சிறிது நேரத்தில் திரும்புவார்கள். எதைச் செய்தாலும் உத்திரவு வாங்க வோண்டும். இது அனுதினம் நடக்கும் ஒன்றாக இருந்தது. .ஒரு நாள் ஒரு பெண்ணிடம் இதைப் பற்றி கேட்டேன்,முதலில் தயங்கியவள் பிறகு கூறியதைக் கேட்டு எனனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பதைக் கண்டு கோபம் கொண்டு உனக்கு தைரியமிருந்தால் தனியாய் சென்றுவா பார்கலாம் என்று சவால் விட்டாள். சில மாணவிகளும் என்னை சாடினார்கள்.செய்தி இதுதான் toilet டில் பேய்!! இருந்து கொண்டு தனியே செல்லும் பொண்களை பல வகையில் சீண்டி இருக்கிறது இதில் பாதிக்கப் பட்டவர்கள் உடல், மன நலன் குன்றி வீடு திரும்பி இருக்கிறார்கள். தவிற்க முடியாதவர்கள் கூட்டு சேர்க்கும் முறை கையாண்டிருக்கிறார்கள். பயமென்றால் கிலோ என்ன விலை என்று சிறு வயது முதல் கேட்பவள் நான்.அதுமட்டுமல்ல யாருக்காவது பிரச்சனை என்றால் முன்னின்று போராடுவது என் வழக்கம்.எனவே boarding mistress ரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்டேன்,உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம் உனக்கு தனி வசதி இருக்கிறதே பிறகு என்ன?பேய்யாவது பிசாசாவது. அதெல்லாம் மன பிரம்மை என்றார்.நான் இதை விடுவதாக இல்லை mother superior சென்று விவரித்தேன் அவர்கள் என்னை அன்புடன் மகளே இந்த பேய், கூட்டமாய் போவோரிடம் ஏன் ஒன்றும் செய்வதில்லை? தனியாய் போவோர் தான் ஏதோ கூறுகிறார்கள். அது வெறும் பயம்,யாரோ கிளப்பிவிட்ட வதந்தி வா நாம் இருவரும் சென்று பார்கலாமா?உனக்கு பயமில்லையே? என்றார். பயமா? எனக்கா?போகலாம் வாருங்கள் என்றேன்.நாங்கள் அங்கு சென்ற போது மாலை 7மணி இருக்கும்.சுற்றி பார்த்து விட்டு வெளியே வரும் போழுது வவ்வால் ஒனறு என தலையில் அடித்துக் கொண்டு வெளியேறியது நான பயப்பட வில்லை மாறாக mother தான் பயந்தார்கள்.வெளிச்சக் குறைவினால் தான் வவ்வால் தங்குகிறது, தயவு செய்து நல்ல பவர் பல்பு போடுங்கள் என வேண்டினேன்.உடனே அதை செயல் படுத்தினார்.

அதிலிருந்து நான் சற்று popular ஆனேன்.மணவிகள் எனனோடு நட்புறவோடு பழகினார்கள். சிலர் மட்டும் மனமடிவாகவே இருந்தார்கள்.நான் அவர்களிடம் வலியச்சென்று உறவாடுனேன். அப்போழுது புரிந்தது,அவர்கள் தான் பாதிக்கப் பட்டவர்கள் எனறு.அதில் ஒரு பெண் உடல் நலம் குன்றி மெலிந்திருந்தாள். அவளை mother பராமரித்து பள்ளி இறுதி தேர்வு எழுதுமாறு உற்ச்சாக முட்டியதால் தேர்வேழுத காத்திருந்தாள். பேயின் செட்டைகளை அவர்கள் கூறும்போது எனக்கு தாளாத சிரிப்பு வரும்,அடைக்கிக் கொள்வேன் வெறும் பிரம்மை என நினைத்தேன். நான் தீர்மாணித்தேன் தனியாய் toilet க்குப் போய் பயத்தைப் போக்குவது என்று, boarding mistress ரிடம் இதைத் தெரிவித்தேன் அவ்வளவுதான் மிகவும் கடுமையாக கோவித்துமல்லாமல் என்னை கணகாணிக்கும்படி கூறிவிட்டார். ராசமாணிக்கம் எனனும் மாது அவர்தான் அங்கு வயதில் மூத்தவர்.5அல்லத் 6வயதுள்ள துளுக்கி பிறந்த சில நாளில் convent வாசலில் விடப்பட்ட குழந்தை. அங்கு அவள் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ,6லிருந்து sslc வரை தான் boarding இருக்க அனுமதி எனவே துளுக்கி தான் அங்கு குட்டிப் பிள்ளை. study hall, prayer hall இரண்டு உண்டு ,எதோ ஒர் hall லில் கூடவேண்டும் என்றால், boarding mistress 6 முதல் sslc வரை அங்கு கூடவேண்டும் என்பார். அவர் தொடங்கு முன்பு நான் ராசமாணிக்கம் அக்காவிலிருந்த் துளுக்கி வரை என்பேன். முதலில் சிரித்தவர்கள் பின்னர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கூற துவஙகினார்கள். ராசமணிக்கம் அக்கா குசினியில் உற்கார்ந்து காலையிலிருந்து மாலை வரை வெங்காயம் அரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் சற்று தொலைவில் வரும் போதே வெங்காய மணம் விசும். ராசமாணிக்கமக்கா வரும பின்னே வெங்காய மணம் வரும் முன்னே, என்பேன் .அவர்கள் சிரித்தாலும் சற்று கடுப்பு உண்டு என்று நினைக்கிறேன். நான் தனியா toilet போகும் செய்தி அவர்களுக்கும் எட்டி விட்டது போலும், என்னைக் கண்டு'' அடியம்மா உன நெஞ்சிலே அஞ்சு யானைய நிறுத்தலாம் போல எம்புட்டு தைகிரியம் ,பொட்ட புள்ளைக்கு இம்புட்டு ஆகாதுடியம்மா" என்று பலவாராய் வாங்கு,வாங்குனு வாங்கினார். நான் செல்ல தேவை இல்லை.ராசமாணிக்கம் அக்காவிலிருந்து துளுக்கி வரை என்னை கண்டித்து watch பன்ன ஆரம்பித்து விட்டார்கள். நானும் பயத்தைப் போக்கும் முயற்ச்சியை விடுவதாக இல்லை.சமயம பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயமும் வந்தது!!!.(தொடரும்)

Thursday, May 31, 2007

Mood Out!!

என் புது template டைப் பற்றியும், ஜி கேட்டுக் கொண்டதால் பேய் பதிவு போட இருந்தேன். கப்பியின் பதிவில் நண்பனின் முடிவு மனவருத்ததை அளித்தது.சிவபாலன் பதிவில் படித்த முட்டாள்கள் இளங்ஞனைக் கொடுமைப் படுத்துவதைப் பார்த்து என்னுடைய இயலாமை இந்த மனித உரிமைஎன்ன செய்கிரது என்ற கோபம். இதில்கொடுமை என்னவென்றால் நீதி மன்ற வளாகத்தில் இது நடந்திருக்கிறது.இதனால் தான் மூடு அவுட்.!!!

Tuesday, May 29, 2007

அறிவிப்பு

அன்பு பதிவாளர்களுக்கு,எங்கள் குடும்பங்களில்
தாய் வழிப் பாட்டியை அம்முமா என்று அழைப்பது
வழக்கம்,என் போத்தி குழந்தையாய் இருந்ந நேரம்
அம்மு என்று அழைத்தாள்,அதுவே வழங்கிவந்தது
அனனானிமஸ்ல் அம்மு என்று பின்னுட்டு எழுதுபவர்
நான் அல்ல.மீண்டும் கூறுகிறேன் அவர் நான் அல்ல

Wednesday, May 23, 2007

ஒன்றே குலமென்று கூடுவோம்

சற்று முன் செய்தியில் 15மே பிராமணர் எடுத்த நல்ல்கருத்துகளை வரவேற்கும் கட்டுரை

அண்டசராசரங்களை படைத்த இறைவன்,பூமி என்ற கோளையும் உண்டாக்கினார்,அதில் மனிதனை உருவக்கி அவனுக்கு துணைவியையும் அளித்து பலுகி பேருகுங்கள் என்றார். அவர் அவனுக்கு அளித்ததோ ஒரே ஒரு பூமி ஆனால் அதை துண்டாடினான் ஐரோபியன்,அமெரிக்கன் இந்தியன்,இத்தியாதி.பின்னும் வெள்ளையன், கருப்பன், இந்தியன். இன்னான் என்று, இந்தியன் தொன்றுதொட்டு மன்னர், குறு நில மன்னர்,என பிரித்து,சுதந்திரம் பெற்ற பின்னும்,உ.பி, ம.பி,வங்கம், கேரளம், ஆந்திரம்,தமிழகம் இப்படியாக மாகாணங்களாக பிரிந்தது. திராவிடம் எனப்படும் இன்றய தென்னகத்தில்,ஆதியில் தம் தொழிலுக்கேற்ப, ஆளுபவன் சத்திரியன்,
என்றும்,வாணிபம் செய்பவன் வணிகன்,தட்டான் கொல்லன், தச்சன், துப்புரவு செய்பவன் என்று,தொழிலில் திறமை கொண்டவனுக்கு அந்தந்த தொழிலின் காரணப் பெயரிட்டான்.
தொழிலில் அதிக கவனம் செலுத்தியதால் தன்னை படைத்த இறைவனை வழிபடும் நேரம் குறைந்ததை கண்டு,வேதங்களை அறிந்து இடைவிடாது இறைவனை வழிபட ஒரு வகுப்பினரை உருவாக்கினான்.அவனே பிராமணன்!.இறைவனை வழிபடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவனை பராமரிக்கும் அவசியத்தை உணர்ந்து, மானியங்கள் அளித்தல், வாழ்கை வசதி செய்தல், இவைகளை இறைவனுக்கே செய்வதாக நினைத்தான்.இவ்வாறுதான் சாதிகள் உருவானதாக நம் மூதாதையர்கள் கூற நான் கேட்டது. இது என் தழ்மையான கருத்தும் கூட.


இறைவன் கொடுத்தொரு பூமியை பிரித்தோம் ஒரேஒரு மனித குலத்தையும் பிரித்தோம் ஏன்?ஒரே இறைவனையும் . பிரித்துக் கொண்டோம்.யூதம்,கிறிஸ்துவம்,முகமதியம்,இந்துத்துவம், எனினும் அதையும் விட்டு வைக்கவில்லை அதிலும்பிரிவுகள்.ஏன் இந்த பிரிவினை?. சமயக் கோட்பாடுகள் மனிதனை நல் வழிப் படுத்தத்தான்,விரும்பியவர்கள் எந்த சமயததை வேண்டுமானாலும் பின்பற்றலாம்,இறைவன் மனிதனுக்கு சுயமாய் செயல்படும் சுதந்திரம் அளித்திருக்கிறார் எல்லா சமயங்களும் நல் வழியைதான் போதிக்கிறது,வழி முறைதான் வித்தியாசப் படுகிறது, .சற்று முன் செய்தியில் பிராமண வகுப்பினர் தங்கள் கொள்கைகளை விட்டு மற்றவர்கலோடு ஒன்றி வாழ முன் வந்துள்ளனர்.சில சமயத்தாரை அவர்கள் ஒதுக்கலாம். காலம் அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஒன்றே குலமென்று கூடுவோம்

Wednesday, May 2, 2007

தாக்கம்

வலைப்பதிவாலர்களோடு என் தாக்கத்தை பகிர்து கொள்ள விரும்புகிறேன். வெயில் மழை,நோடிஸ் போடு பதிவுக்கு சென்றிருந்தேன். நோடிஸ் போடு கண்டதும் இளமை ஊஞ்சலாடியது,ஆனால் இறுதியாய் இரண்டில் முதல் போசும் நிழல்படத்தை கண்டதும் எனக்கேற்பட்ட தாக்கம் புதிதல்ல, சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு,என் பேத்தி கைகுழந்தையாய் இருந்த சமயம் தள்ளுவண்டில் வைத்து சுற்றுவது எனக்கு விருப்பமானது ஒன்றாகும். என் வழ்கையில் பெரிதாய் சாதித்ததுபோல் ஓர் உணர்வு.

ஒரு தினம் அவ்வாறு நான்செல்லும்போது தடையின்றிக் கடக்கும் வழியில் கடக்க அறியாது நான் தடுமாறும் வேளை ஓர் இளைஞன் என்னை கைபிடித்தழைத்து கடக்கச் செய்தான்.தடையின்றி கடக்கும் தடயத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கினான்.நானும் என் அறியாமையை ஏற்று நன்றி கூறினேன் பனி காலங்களில் பனி உடுப்பு உடுத்தி சித்தானையாய் சுற்றிம் நான கோடையானதால் சீலை உடுத்தி இருந்ததைக் கண்டு நீங்கள் இந்தியரா? என்று வினவ,ஆம் தமிழச்சி என்றேன்.ஒரு வித சோகத்தோடு இருந்த அவன் முகம் வினாடியில் ஒளிர்ந்து மறைந்து.அந்த உணர்வைக் கண்ட நான் அவனோடு உரையாட தீர்மானித்தேன்
சாலையோர இருக்கையில் அவனை அழைத்து அமர்தேன்.நீயும் தமிழன் தானே?உன் ஊர் எது என்று கேட்க ,எனகென்று ஒரு தாயகம் இருந்தது, இப்போதில்லை என்றான்.அவன் ஓர் இலங்கை தமிழன் என்றும் ,அங்கு அவன் சுற்றம் பட்ட வேதனையும்,அவன் கண்முன் அவன் சகோதரி.....எழுத கூசும்,,மனம் பதறும் இகழ்ச்சியை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. என் கண்ணீரில் அவன் உருவம் மறைந்தது ,அவனுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்தைகள் இல்லை.குலுங்கி குலுங்கி அழுத என்னையும் அவன் தேற்றினான்.என்னை பார்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வினவினான் ஒரு சாந்தமான மகனாய் தோன்றுகிறாய் என்றேன்.அம்மா நான் ஒரு விடுதலை புலி .என் உயிர் எனக்கல்ல என் மண்ணுக்கே என்றான்.ஓ...இவ்வாறுதான் தீவிரவாதீ உருவாகிறானா??என்ற சந்தேகம் என்னுள் வந்தது.என் சந்தேகத்தை புரிந்தவன் போல் எல்லா தீவிரவாதீயும் என்னை போல்லல்வென்று கூறி ஓர் உணர்ச்சியற்ற புன்னகை புரிந்தான்.அவனோடு இருந்த அந்த மணிதுளிகளில் இருந்த என் உணர்வு என்ன?என்று எனக்கு புரியவில்லை.அநீதியைகண்டு பதரினேனா?வெறுத்தேனா?தாய் அன்பால் உறுகினேனா,புரியவில்லை.அந்த தாக்கம் சில மாதங்கள் என் மனதில் நீடித்தது லண்டன் செல்லும் வேளைகளில் வீதிகளில் இன்னமும் என் கண்கள்அவனை..... தேடுகிறது

Monday, April 30, 2007

அன்புத்தாலாட்டு



அம்மு என்றழைத்தது குயிலா
அசைந்தாடி வருவதென்ன மயிலா
உன் இதழென்ன பொற் சிமிளா
இளநகையில் உதிர்தது முத்தின் மணியா
நான் காண்பது கனவா? நினைவா? இறைவா ! இறைவா !


என் தலைமகள் ஈன்றது தங்கமா
மின்னும் தங்கத்தில் பதித்த நல்வைரமா
தளிர் நடை பயில்வது தாரகையா
தண்ணொளி சிந்திடும் வெண்மதியா
இது இரவா ? இல்லை பகலா ? இறைவா ! இறைவா !


விழிஇது மானின் மருள் விழியா
வழிவழியாய் வந்த என்
வம்சாவளி விழி இதுவா
இசையாய் பிறந்தத் தழிழ் நீயா
நான் காண்பது கனவா ? நினைவா ? இறைவா ! இறைவா !

Saturday, April 28, 2007

அகரவரிசையில் ஆதியாகமம்






றவமாம் அலகையின் சூதிணால்
திமனிதனு ஏவையுமே
ழந்திட்டார் இறையன்பை- எனினும்
ந்திட்டார் தன்சுதனை-இவ்
லகத்தார் உயிர்கவே
ர்ந்துவந்த சாத்தானை
டுத்தெரிய வந்தவர்தாம்
சுபிரான் மனுஉருவில்
யமற உரைத்திட்டது-அவர்
ளியாம் இவ் உலகிற்க்கு
திடும் திரு வேதந்தனில்
ளடதமாம் அவ்வாக்கு
து நமக்களிப்பது ஆதியாகமமே

Friday, April 20, 2007

Arimugam

En Eniya Tamil Valai Pathivalargalay,Valinigalay!

En Muthal Kan Aasir. Aasir endrathum ennai samiyarinee endru ennividaathirgal!. Uyar thiru Natamai Shyam, ennai thalaivee endru mummozhinthu, thertheyduka patirukirain. Valiba pendir, thangalai valibi endru damarumo.. thumbatumo... adithukolvathilai. Ennai pondra than adakam, ulla magalir thandoora pottu pragadanam saivom!

Nan than Ulagam Sutrum Valibi!. Angana Enna Ellipu?, thoda! Engana erukum Singapore poi vanthu Ulagam Sutrum Valiban M.G.R sonna ethukuvinga! Aanna Asia Kundum, Europe Kundum, America Kundum enu, paathi ulagathai suthi vanthe ennai ethukamatinga!. Aannu oru neethi, pennuku oru neethiya?. Penn urimaiyai kakka, oru katchi erpadithiyee agavendum!.Tha. Mu. Kaa( thangamanigal munetrum kalazhum) Katchi thalaivee Naanthan!, seyalalar thirumathi shyam thangamani! ennudaya valarpu magan, en arumai jollu pandiyai etru kolkirain! mangaiyarai jollugalidum eerunthu paathukakum paathukavalar avar!. Ennai polla pala valibigal, singara chennai' yil undu, naangal palzhamai mikunthavargal pol narai thirai maraika dye addithum, foundation potukundum allaivathellai. Ellamai usal adda, perrangalodu cricketum, pethigalodu kanna muchi, kutaansorumaga, kalithirupom. Evagalukellam nan sigaram pol, oru padi mail! en pethiyodu baby mummy velaiattu!. Naan couchil babyaga kidaka, aval ennaku mummyaga paramarikum alzhgu eruke, kan kolla katchi!.

Thalaiviyaaga therdeyduka patta naan, pathavi pramanam ungal mun eduthu kolla velaikirain. sathiyamaga, unmaiyaga, nessamaluma,naan eluthuvathellam, yaar manathaiyum punnpadutha alla. Nagaisuvaiyai kala kala pai sirika vaipathey en kolgai! latchiyum! en kazhaga kolgaium athuvey!


Thalaiveyin Sirapurai


Perum kudi, Sirum Kudi, Kudikatha makkaley! en arumai thangamanigalay! engu naan lolaichika thailaiviyai therdeyuka padavilai, ennai therdeyduthavar Yaar??..."NALAVAR!! VALLAVAR!! NAALUM THERINTHAVAR!! UYAR THIRU NATAMMAI SHYAM!." Avar oru uyarintha manithan(tall man), pathiramathu thungum(24 carat gold) ariVaalghi( intelligent bucket) thuppuariyum nibunar(C.I.D), naangu vari ulla en resume parthuvittu, en date of birthai kanithuvita maaga methai. Avar Scotland Yardil eruka vendiyavar!. Washingtonil natu aaamai aga erukirar, avarai nattu ammai endru elli nagaikiravarirgalai naan echarikirain. Ammaithan andru antha garvam pidditha muyalai vendrathu, endru sarithirum kurukirathu!. Avar oru thanalamutra menmaiyana manithar enbatharku utharanam than antha urulaikilzhungu bonda. Mele urithiyaana kadalaimaavu ullay menmaiyana urulaikilzhungu. Avarin pathivai parthu, silar avarin thangamaniyin kaalai varinaar endru kurinaal thavaru. Avar thangamaniyin kaalil vezhathan kuninthare ozhiya vaara alla. Em mathamum summathum endru aethrukolum perunthagaiyalar. Avar thannai pol piranai nesee endru christuvam koorum commandments pinpatruvavar. thangamanigalidum vasamaai matti kondal surrender aki kaalil vizhuvathu endru piraruku email pottu kurumalavirku pirar neesam kondavar endru koorinal athu mekai aakathu! Ennai thalaiviaakia ponmana semel thaaikulum kaakum thavaputhalvan thanalamatra thiyaagi! innarin arumai perumaigalai kooravital kuyil thaan muttaieduma? kozhithaan kunju porikumaa? ungal kalaaithal mugangal en munee erunthaalum kazhagapani ennai pinne azhaikirathu, vanakum.


Ellorum votu potu poongal, thalaivi solukiren votu podugal! Naan orutharam sonnal nurutharam sonna mathiri!
Thayavuseithu votupodungapa!
Kumputtu ketukirain votupodungapa!
Votupodunga aluthuruven!