Wednesday, July 25, 2007

மஞ்சள் மகிமை

மஞ்சள் மங்களகரமான பொருள்.இறைவன் அளித்த அற்ப்புத முலிகை என்று கூறினால் அது மிகையாகாது.எந்த ஒரு மங்கள நிகழ்ச்சிக்கும் முதலிடம் பெறுவது மஞ்சள்.தங்கத் தாலி இல்லா வரிய மகளிர் மஞ்சள் தாலி அணிவதும் உண்டு.ஏன் இதற்க்கு இத்தனை பெருமை.
திருமண நிகழ்ச்சியில் மஞ்சள்,விழாக்களில் மஞ்சள்,காயப்பட்டால் மஞ்சள்,கதவு நிலைப் படியில் மஞ்சள்,உணவில் மஞ்சள்,புது உடையில் மஞ்சள்.மஞ்சள் நம் வாழ்வின் அங்கமாகவே திகழ்கிறது.இது இறைவன் நமக்கு அளித்த அறிய முலிகை என்று முன்பே கூறிவிட்டேன்.மஞ்சளைப் பற்றிய குறிப்புக்களையும் அதன் உணவு சத்தின் விகிதத்தையும் நம் கலாச்சாரத்துடன் எவ்விதமாய் கலந்துள்ளது என பலவற்றை நான் சேகரித்து பதிவாக இட இருந்தேன்.24ம் தேதி தினமலர் வெளியிட்டில் அமெரிக்கா லாஸ்அஞ்சல்லிஸ் நகரத்தில் உள்ள அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தில் செயலாற்றும் டாக்டர் மிலன் பாய்லாவின் கண்டுபிடிப்பில்,எதிற்ப்பு சக்தி குறையும் போது நினைவாற்றல் நரம்புகளைப் பாதிப்பது அமிலாய்டு எனப்படும் ஒரு வகை ரசாயனப் பூச்சாகும்.எவ்வகை மருந்தினாலும் இதை எடுக்க முடிவதில்லை.இதை நீக்க உதவும் ரசாயனம் நம் சமையல் (கறிமஞ்சள்) மஞ்சளில் உள்ளது.எனவே மஞ்சளை உணவில் சேர்க்க கூறுகிறார்கள்.நம் சமையலில் மஞ்சள் சேர்க்காத கறி, குழம்பு வகையே இல்லை என்று கூறலாம்.வரும் பதிவில் மஞ்சளின் சத்து விகிதம்,நம்மவர் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்துகிறோம் என்பதை என்பதை விரிவாக கூறுகிறேன்.கிழ் வரும் செய்தி TheSpiceBarn.com

thanks to TheSpiceBarn.com for the following information:
quote:

Turmeric is one of the key ingredients in curries as well as prepared mustards, giving them color and flavor.

With it's rich distinctive yellow colour and flavor, Indian turmeric is considered the best in the world. India is the largest exporter of turmeric to countries like Canada,Middle East,UK,USA and Japan. Turmeric has been cultivated in India for more than 2000 years.

Besides it's culinary gifts, Turmeric is also used to dye cloth.
unquote:

Monday, July 9, 2007

" 8 " போட்டாச்சு.

நம்பளைப் பற்றியே நாம்ப பீத்திக்கனுமுன்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு,என்ன செய்யிறது பீத்துக்குவோம்.
வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை,ஆனால் நல்ல மனைவியாய்,தாயாய், பாட்டியாய்,தோழியுமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெறுங்கினப் பொருள் கைப்பட வேண்டும்.என்பதில் நம்பிக்கைக் கொண்டவள்.

1.தெய்வ நம்பிக்கை:-
இறை நம்பிக்கை சிறு வயதுமுதல் என்னுள் உருவானது.இந்த நம்பிக்கைத் தான் என் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட தாழ்விலும்,துன்பத்திலும் உறுத்துனையாய் இருந்தது.மலைப் போல் வந்த துன்பங்கள் பனிப் போல் மறைவதை நான் மட்டும்மல்ல என்னை சூள்திருப்பவர்களும் உணர்வது.இறை நம்பிக்கையால் மனதில் உறுதி உண்டு.
2.அன்பு பாசம்:-
என்னுடைய strength and weakness என் பிள்ளைகள் என போத்தி.என் அன்புத் தொல்லைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதி படுவதும் உண்டு.அன்பினால் நன்பர் குழு அதிகம்,நான் அன்பு காட்டுவோர் என்னிடம் அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
3.நட்பு:-
எத்தனை நாட்கள்,வருடங்கள் ஆனாலும் நன்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது.அவர்களின் இன்ப,துன்பங்களில் பங்கு கொள்வது.
4.இளகிந மனம்:-
துன்ப,மன வருத்தத்தில் உள்ளவர்களைக் கண்டால் வலிய சென்று ஆறுதல் கூறுவது முடிந்த அளவு உதவுவது.இதனால் இக்கட்டில் மாட்டிக் கொள்வது.இருப்பினும் வருத்தத்தில் உள்ளவர்களை காணாமல் போக என்னால் இயலாது.
5.செய் நன்றி:-
செய் நன்றி என்றும் மறப்பதில்லை.செய்த உதவிக்க்கு கைமாறு செய்வதில் ஆர்வம் கொள்வது.
6.பொறுப்பு:-
பொறுப்புக்களை ஏற்க்கும் போழுது அதில் சிரத்தையுடன்,சிறப்பாக செய்வது,அதன் பயனாக நல்ல மனிதர்களின் அறிமுகத்தைப் பெற்றது.
7.பாரம்பரியப் பெருமை:-
நமது கலாச்சாரம்,பழக்க வழக்கங்கள் அதன் அடிப்படை அறிவியல்.தாய் வழிப்பாட்டி,தந்தை வழிப் பாட்டி,கணவர் வழிப் பாட்டி இவர்களின் கைவைத்திய்,சமையல் குறிப்பு, கைவேலை இவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளுதல்.
8.
சூழ்நிலைக்கு ஏற்று அமைவது:-
எந்த சூழ் நிலையையும் ஏற்று வாழ்வது,எதைக் கொடுத்தாலும் சுவையுடன் சமைப்பது,கலை நயத்துடன் அமைப்பது,ஒன்றே குலம் என்ற கொள்கை கொள்வது.
ஒரு வழியா முடிச்சாச்சு அப்பா!

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

ஆள் பிடிக்கிறது:
கண்ணபிரான் ரவி சங்கர்
பாலர
செந்தில்
சிங்கமுல ace
முத்துலச்சுமி
தேவபுதல்வன்
ஜொள்ளு பாண்டி
செல்வேந்திரன்